என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தென்காசி காசி விசுவநாதன் கோவில்
நீங்கள் தேடியது "தென்காசி காசி விசுவநாதன் கோவில்"
தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணி கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.#TNAssembly #KasiViswanatharTemple
சென்னை:
சட்டசபையில் இன்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:-
வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது.
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் முன்வந்து கோவில் கோபுர திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 25.11.1984 அன்று தனது முதல் பணியை தொடங்கி, முதல் தளத்தை அய்யா சிவந்தி ஆதித்தனார் முடித்து கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து அந்த கோபுர பணிகள் 6 ஆண்டுகள் செய்யப்பட்டு முடிந்தது. அப்போது கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
2004-ம் ஆண்டு அம்மா ஆட்சியின்போது காசி விசுவநாதர் கோவிலுக்கு மீண்டும் திருப்பணிகள் ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடந்தபோது அரசு சார்பில் ரூ.10 லட்சம் அந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அப்போது திருப்பணிகள் தொடங்கும் சமயத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் கோவிலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார். இதனால் 17.3.2006 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
தற்போது 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளனர்.
எனவே கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-
தென்காசி காசி விசுவநாதர் கோவில் 17.3.2006 அன்று குடமுழக்கு நடந்தது. ஆகம விதிப்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
குடமுழக்கு நடைபெற அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பணிக்கான மதிப்பீடு ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNAssembly #KasiViswanatharTemple
சட்டசபையில் இன்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:-
வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது.
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் முன்வந்து கோவில் கோபுர திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 25.11.1984 அன்று தனது முதல் பணியை தொடங்கி, முதல் தளத்தை அய்யா சிவந்தி ஆதித்தனார் முடித்து கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து அந்த கோபுர பணிகள் 6 ஆண்டுகள் செய்யப்பட்டு முடிந்தது. அப்போது கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
2004-ம் ஆண்டு அம்மா ஆட்சியின்போது காசி விசுவநாதர் கோவிலுக்கு மீண்டும் திருப்பணிகள் ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடந்தபோது அரசு சார்பில் ரூ.10 லட்சம் அந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அப்போது திருப்பணிகள் தொடங்கும் சமயத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் கோவிலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார். இதனால் 17.3.2006 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
தற்போது 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளனர்.
எனவே கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-
தென்காசி காசி விசுவநாதர் கோவில் 17.3.2006 அன்று குடமுழக்கு நடந்தது. ஆகம விதிப்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
குடமுழக்கு நடைபெற அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பணிக்கான மதிப்பீடு ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNAssembly #KasiViswanatharTemple
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X